மாநபி கூறும் மண்ணறை வாழ்க்கை

 


மாநபி கூறும் மண்ணறை வாழ்க்கை




இம்மைக்கும் மறுமைக்கும் இடைப்பட்ட பர்ஸகுடைய வாழ்வு


உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் மரணத்தைத் தழுவியே ஆக வேண்டும். ஒரு மூமினுடைய விசுவாசத்தில் மறுமையை விசுவாசிப்பது மிக முக்கியமான ஓர் அம்சமாகும். மறுமையின் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் எவ்வளவு நல்ல செயல்கள் புரிந்த போதிலும் அவை அனைத்தும்


பயனற்றதாகவே ஆகிவிடும்.


உலகில் வாழ்கின்ற நல்லவர்களாயினும் தீயவர்களாயினும் அனைவரும் தமது மரணத்திற்குப் பின்பு கப்ர் வாழ்வை அனுபவித்தே ஆகவேண்டும். கப்ர் வாழ்வை பர்ஸகின் வாழ்வென்று அல்குர்ஆன் கூறுகின்றது.,


حَتَّى إِذَا جَاءَ أَحَدُهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارۡجِعُوْنَ لَعَلِّي أَعْمَلُ صَالِحَىٰكَ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرۡزَخٌ إِلَى يَوْمْنٍَ


"(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கேனும் மரணம் வந்து விட்டாலோ, (அவன் தன் இறைவனை நோக்கி) என் இறைவனே! என்னை (உலகுக்கு)த் திருப்பி அனுப்பி விடு. நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி மேல்) நற்காரியங்களையே செய்து கொண்டிருப்பேன்'' என்று கூறுவான். (எனினும் அது நடக்கக் கூடிய காரியம்) அன்று. (இத்தகைய சந்தர்ப்பத்தில்) அவன் கூறக் கூடியது வெறும் வார்த்தையே (அன்றிவேறில்லை) அவர்களுக்குப் பின் அதில் (உயிர் கொடுத்து) எழுப்பப் படும் நாள் வரையில் ஒரு BARZAKH பர்ஸக் (அரண்) உண்டு.


திருக்குர் ஆன் 23:99,100


பர்ஸக் BARZAKH என்பது இம்மைக்கும் மறுமைக்கும் இடைப்பட்ட ஓர் உலகமாகும். இம்மை ஓர் உலகம் என்பது எப்படி உண்மையோ அவ்வாறே பர்ஸக் என்பதும் ஓர் உலகமாகும். இம்மையில் வாழ்வது போன்றதொரு வாழ்க்கை பர்ஸகிலும் உண்டு.


கப்ரில் வைக்கப் படுகின்ற ஒவ்வொருவரும் 'முன்கர்' நகீர் என்ற இரண்டு மலக்குகள் மூலம் விசாரிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய விசாரணையின் பின்னர் நல்லவர்களுடைய கப்ர் பசுமையுள்ள ஓர் இடமாக ஆக்கப் பட்டு எழுபது முழம் விசாலமாக்கப்படும். மறுமை நாள் வரை அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள்.


மரண வேளையில் இன்பமும் துன்பமும்


தீயவர்கள் மிகக் கடுமையாக விசாரிக்கப்படுவார்கள். அப்போது அவர்கள் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல் திணறுவார்கள். பலதரப்பட்ட வேதனைகளை அவர்களுக்கு அளிக்குமாறு அல்லாஹ் மலக்குகளுக்கு உத்தரவிடுவான். இரும்புச் சம்மட்டிகளால் அவர்கள் அடிக்கப்படுவார்கள். அவர்களுடைய விலா எலும்புகள் ஒன்றுடனொன்று பின்னிக்கொள்ளுமளவு கப்று அவர்களை நெருக்கும். மரண வேளையில் நல்லவர் தீயவர் இருவருடைய நிலை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த உபதேசமொன்று பின்வருமாறு அமைந்துள்ளது.


"மதீனாவாசி ஒருவருடைய ஜனாஸாவைப் பின் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சென்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ர் அருகில் அமர்ந்தார்கள். நாமும் அவர்களைச் சூழ அமர்ந்தோம். நபியவர்கள் சிறிய குச்சியொன்றினால் நிலத்தில் கீறிக் கொண்டிருந்து விட்டு திடீரென தமது தலையை உயர்த்தியவர்களாக "கப்ருடைய வேதனையை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளுங்கள்" என்று மூன்று தடவை கூறினார்கள். பின்னர் மரணத்தறுவாயிலுள்ள ஒரு மூமினுடைய நிலை பற்றிக் கூறினார்கள்.


"மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு மறுமையை நோக்கிக் கொண்டிருக் கையில் சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமுள்ள முகத்துடன் வானிலிருந்து சில மலக்குகள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்துத் துணிகளையும் சுவர்க்கத்தின் நறுமணங்களையும் வைத்துக்கொண்டு பார்வைக்கு எட்டும் தூரத்தில் நிற்பார்கள். அவனுடைய


அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் மலக்கு வந்து அவனருகில் அமர்வார். அவனை நோக்கி "நல்ல ஆத்மாவே! நீ அல்லாஹ்வுடைய மன்னிப்பளவிலும் அவனுடைய பொருத்தத்தி னளவிலும் இந்த உடலிலிருந்து வெளியேறி விடு" என்று கூறுவார். தோல் பையொன்றிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலிலிருந்து இலகுவாக) வெளியேறி விடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.


அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள், உடனே சுவர்க்கத்துத் துணியிலும் நறுமணத்திலும் அதனை வைத்து விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனைச் சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கிச் சென்று வானத்தைத் திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.


வானத்து மலக்குகள் வந்தவர்களை நோக்கி உங்களுடன் இருப்பவர் யார் என வினவுவர். அவர் இன்னாருடைய மகன் இன்னார் என இவர்கள் பதிலளிப்பர். மீண்டும் அவர்கள் "அவரது நிலை என்ன?" என வினவுவர். அதற்கு இவர்கள் "அவர் ஸாலிஹான ஓர் அடியார்" என பதிலளிப்பர். அதனையடுத்து அம்மலக்குகள் வானத்தைத் திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே வினாவும் விளக்கமும் நடைபெறும். ஏழாவது வானத்தைக் கடந்து சென்றதும், அல்லாஹ் ஆத்மாவைச் சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி, "எனது இந்த அடியானுடைய செயல்களை 'இல்லிய்யீனிலே (மூமின்களுடைய ரூஹுகள் இருக்குமிடம்) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவனது உடலில் அவனது ஆத்மாவை சேர்த்து விடுங்கள்" என்று கூறுவான்.


(அந்த மலக்குகள் அவ்விதமே செய்வார்கள்.) அப்போது அவரிடத்தில் (முன்கர் நகீர் என்ற) இரண்டு மலக்குகள் வந்து அவரை எழுந்திருக்கச் செய்து, அமர வைப்பார்கள். அவர்கள் அந்த அடியானை நோக்கி பின்வருமாறு கேள்விகள் கேட்பார்கள்.


கே : உனது இறைவன் யார்?


ப : எனது இறைவன் அல்லாஹ்.


கே உனது மார்க்கம் என்ன?


ப : எனது மார்க்கம் இஸ்லாம்.


கே : உன்னிடத்தில் (மார்க்கத்தைப் போதிக்க) அனுப்பப் பட்டவர் யார்?  அவர் அல்லாஹ்வுடைய ரஸுல்; முஹம்மத் (ஸல்)


கே : நீ அதனை எவ்வாறு அறிந்து கொண்டாய்?


U அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதினேன்; அதனை விசுவாசம் கொண்டேன்; அதனை உண்மைப் படுத்தினேன் .


"எனது அடியான் உண்மையுரைத்துவிட்டான். அவனுக்காகச் சுவர்க்கத்தின் விரிப்புகளை விரித்துவிடுங்கள். சுவர்க்கத்தின் ஒரு கதவை அவனுக்காக திறந்து விடுங்கள்" என்று கூறக்கூடிய ஓசையொன்று அப்பொழுது வானிலிருந்து வரும். அவனுடைய கண் பார்வை எட்டுமளவு அவனது கப்ர் விசாலமாக்கப்படும்.


அப்போது நறுமணம் கமழ அழகிய ஆடை அணிந்து வசீகரமான தோற்றத்துடன் ஒரு மனிதர் அவரிடத்தில் வருவார். அம்மனிதர் அவரை நோக்கி "உனக்கு வாக்களிக்கப்பட்ட உன்னை மகிழ்வூட்டக்கூடிய ஒரு நன்னாள் இதுவாகும்" என்று கூறுவார்.


அந்த மூமின் அம்மனிதரை நோக்கி "நீர் யார்?" என்று கேட்பார். அப்பொழுது அம்மனிதர் "நான் தான் (நீ உலகில் தேடி வைத்த) உனது 'ஸாலிஹான அமல்கள்' (அல்லாஹ் இந்த உருவத்தில் உன்னிடம் என்னை அனுப்பி வைத்தான்)" என்று கூறுவார். அப்பொழுது அந்த மூமின், "அல்லாஹ்வே! எனது குடும்பத்துடனும் நான் தேடி வைத்திருந்த எனது அமல் களுடனும் சென்றடைய மறுமையை உண்டாக்குவாயாக!" என்று கூறுவார். மரண வேளையிலிருந்து கப்ர் வரை ஒரு முஃமினுடைய நிலை இதுவாகும்.


நிராகரிக்கக்கூடியவன் மரண வேளைளை நெருங்கி விட்டால் கருநிற (விகாரமான) முகத்துடன் சில மலக்குகள் வந்து அவனது கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும்.


அப்பொழுது உயிரைக் கைப்பற்றக் கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வார். அவர் அவனை நோக்கி, "கெட்ட ஆத்மாவே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து இழிவின் பாலும், அவனுடைய கோபத்தின் பாலும் நீ வெளியேறி வா" என்று கூறுவார்.


அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்துகொள்வதற்காக உடல் முழுவதும் ஒட ஆரம்பித்துவிடும். உயிரைக் கைப்பற்றக் கூடிய மலக்கு அவனுடைய உடலிலிருந்து பலவந்தமாக உயிரைப் பிடுங்கி எடுப்பார். நனைந்த கம்பளியிலிருந்து ஒரு மயிரைப் பிடுங்குவது எவ்வளவு கடினமாகுமோ, அதனை விடக் கடினமாக அந்த உயிரைப் பிடுங்கி எடுப்பார்.


பின்னர், அது அந்தக் கம்பளியில் சுருட்டப்பட்டு முதலாவது வானத்துக்குக் கொண்டு செல்லப்படும். ஒரு பிணத்தின் வாடையை விட அதிலிருந்து துர்வாடை வீசும். முதலாவது வானத்திலுள்ள மலக்குகள் "இந்தத் துர்வாடை என்ன?" என்று கேட்பார்கள். அப்பொழுது அந்த மலக்குகள், "உலகில் வாழ்ந்தவர்களில் மிகக் கெட்டவனான ஒருவனுடைய உயிர் கொண்டு வரப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்.


அதனைத் தொடர்ந்து வானத்தைத் திறந்து விடுமாறு ரூஹைச் சுமந்து வந்த மலக்குகள் கூறுவார்கள். "அவனுக்காக வானம் திறக்கப்படமாட்டாது". நபியவர்கள் இவ்வாறு கூறி விட்டுத் தொடர்ந்து பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.


السَّمَاءِ وَلَا يَدْخُلُوۡنَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمٌ الْخِيَاطِ وَكَذَلَا الْمُجْرِمِينَ.


‘நிச்சயமாக எவர், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டாரோ அவருக்கு, (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில், அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவே மாட்டார்கள். குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்'.


திருக்குர் ஆன் 7:40


பின்னர் அல்லாஹ், உயிரைச் சுமந்து வந்த மலக்குகளை நோக்கி அவனுடைய செயல்களை பூமியின் அடிப் பாகத்திலுள்ள 'ஸிஜ்ஜீன்' என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர் அந்த உயிர் முதலாவது வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு எறியப்படும்" என்று கூறிவிட்டு மீண்டும் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.


مَنۡ يُشْرِكۡ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوۡ تَهْرِكْ بِاللَّهِ مَكَانٍ سَحِيْقٍ.


0 ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதியப்படும் இடமாகும்.

“அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காதீர்கள். யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்துவிட்டவரைப் போன்று ஆகி விடுகின்றார்.(காகம், கழுகு போன்ற) பறவைகள் இராய்ந்து கொண்டு சென்றதைப் போலவோ அல்லது வெகு தூரத்தில் காற்று அடித்துக் கொண்டு சென்றதைப் போலவோ ஆகிவிடுவார்.''


திருக்குர் ஆன் 22:31


ஸிஜ்ஜீனிலே அவனுடைய செயல்கள் பதியப்பட்ட பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அதனைத் தொடர்ந்து இரண்டு மலக்குகள் அவனிடம் வந்து அவனை எழுப்பி, அமரச் செய்வார்கள். அவனிடத்தில் பின் வருமாறு கேள்விகள் கேட்பார்கள்.


கே : உனது இறைவன் யார்?


ப ஆ...ஆ.... எனக்குத் தெரியாது.


கே உனது மார்க்கம் என்ன?


: ஆ...ஆ... எனக்குத் தெரியாது.


கே : உன்னிடத்தில் (மார்க்கத்தைப் போதிக்க) அனுப்பப் பட்ட மனிதர் யார்?


ப : ஆ...ஆ... எனக்குத் தெரியாது.


(மேற்சென்னவாறு அனைத்துக் கேள்விகளுக்கும் தனக்குத் தெரியாது என்றே பதில் சொல்வான்.) "இவன் பொய் சொல்லுகிறான்; நரகத்தின் விரிப்புக்களை இவனுக்காக (கப்ரில்) விரித்து விடுங்கள்; நரகத்தின் பக்கமிருந்து ஒரு கதவை இவனுக்காக திறந்து விடுங்கள்" என்று கூறக்கூடிய ஓசையொன்று அப்பொழுது வானிலிருந்து வரும்.


நரகிலிருந்து உஷ்ணமும், விஷக்காற்றும் அவனுடைய கப்ருக்குள் வீசும். அதனால் காற்று வீசும் போதெல்லாம் அவன் மயக்கமுற்று விழுவான். அவனுடைய வலது இடது விலா எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னி விடுமளவு கப்ர் அவனை நெருக்கும். அழுக்கான ஆடையும் அவலட்சண முகமும் கொண்ட துர்வாடை வீசக்கூடிய ஒரு மனிதன் அவனிடம் வருவான். அம்மனிதன் அவனை நோக்கி, "உனக்கு வாக்களிக்கப்பட்ட, கேடு உண்டாக்கக்கூடிய இந்நாளை உனக்கு நான் (நினைவூட்டி ) நன்மாராயம் கூறுகிறேன்" என்பான். அப்பொழுது அவன். "அவலட்சமான இந்நிலையில் இருக்கும் நீர் யார்?" என்று அம்மனிதனை நோக்கிக் கேட்பான். "நான் தான் உனது தீய செயல்கள்” என்று அவன் பதிலளிப்பான். அதனைத் தொடர்ந்து "இறைவனே! நீ மறுமையை உண்டாக்காதே!” என்று புலம்ப ஆரம்பித்து விடுவான்.


அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், ஹாகிம்


மனிதன் செய்கின்ற தப்புத் தவறுகளை உணர்ந்து அல்லாஹ்விடம் கெஞ்சி பாவமன்னிப்புத் தேடப் பல சந்தர்ப்பங்களை அல்லாஹ் வழங்குகிறான். அவ்வாறான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் அலட்சியப் படுத்தி விட்டு மரணத்தறுவாயிலோ அதற்குப் பின்னாலோ புலம்புவதில் என்ன தான் பயன் உண்டு? அல்லாஹ் வழங்குகின்ற சந்தர்ப்பங்களைப் பற்றிய அறிவிப்பொன்று பின்வருமாறு அமைந்துள்ளது.


மனிதனுக்கு, அவனுடைய வயது அறுபதாகின்ற வரை அல்லாஹ் அவனுடைய ஆயுளைப் பிற்படுத்தி வைத்து (பாவமன்னிப்புத் தேட) சந்தர்ப்பத்தை வழங்குகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


ஆதாரம்: புகாரி

Comments